by Staff Writer 08-05-2021 | 4:11 PM
Colombo (News 1st) உணவிற்காக பயன்படுத்தப்படும் தேங்காய் எண்ணெயில் ஏனைய எண்ணெய் வகைகளை கலக்கக் கூடாது என அறிவித்து சுகர்வோர் விவகார அதிகார சபையினால் விசேட கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கான அதிவிசேட வர்த்தமானி நேற்றிரவு வௌியிடப்பட்டது.
தேங்காய் எண்ணெய் இறக்குமதியாளர்கள், சுத்திகரிப்பாளர்கள், உற்பத்தியாளர்கள், மொத்த விற்பனையாளர்கள், மொத்தமாக களஞ்சியப்படுத்துவோருக்கு இந்த கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.