ஏப்ரலில் அதிகளவில் இந்திய சுற்றுலாப் பயணிகள் வருகை

ஏப்ரல் மாதத்தில் இலங்கை வந்த சுற்றுலாப் பயணிகளின் அதிகமானோர் இந்தியர்கள்: சுற்றுலா அதிகார சபை தெரிவிப்பு

by Staff Writer 08-05-2021 | 8:17 PM
Colombo (News 1st) கடந்த ஏப்ரல் மாதத்தில் நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளில் அதிகளவானவர்கள் இந்தியர்கள் என சுற்றுலா அபிவிருத்து அதிகார சபை குறிப்பிட்டுள்ளது. ஏப்ரலில் 4,168 பேர் வருகை தந்திருந்ததுடன், அவர்களில் 19 வீதமானவர்கள் இந்தியர்கள் என சுற்றுலா அபிவிருத்து அதிகார சபை சுட்டிக்காட்டியுள்ளது. 796 பேர் இந்தியாவில் இருந்து வருகை தந்துள்ளனர். சீனாவில் இருந்து 475 பேரும் கசகஸ்தானில் இருந்து 440 பேரும் ஜெர்மனியில் இருந்து 383 பேரும் ஐக்கிய இராச்சியத்தில் இருந்து 334 சுற்றுலாப் பயணிகளும் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.