இன்று (08) முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகள்

by Staff Writer 08-05-2021 | 2:58 PM
Colombo (News 1st) நாட்டின் 5 மாவட்டங்களில் மேலும் 21 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் - கொடிகாமம் மத்தி மற்றும் கொடிகாமம் வடக்கு ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். கம்பஹா மாவட்டத்தின் வத்தளை பொலிஸ் பிரிவில் கெரவலப்பிட்டிய, வத்தளை, ஹேக்கித்த, பள்ளியாவத்த தெற்கு ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. மாபாகே - கெரங்கபொக்குன , கலஉடுபிட்ட, மத்துமகல ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. களுத்துறை மாவட்டத்தில் மஹவஸ்கடுவ வடக்கு, நாகொட தெற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவிலுள்ள விஜித மாவத்த, வித்தியாசார கிராம உத்தியோகத்தர் பிரிவில் போசிறிபுற பகுதியும், யட்டதொலவத்த மேற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவில் கொரட்டுஹேன கிராமமும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்தார். இதேவேளை, காலி மாவட்டதின் ஹபராதுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொக்கல 01, கொக்கல 02, மீகஹகொட, மலியகொட, பியதிகம மேற்கு ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் இன்று அதிகாலை முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. கொழும்பு மாவட்டத்திலுள்ள பிலியந்தலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நிவன்திட்டிய, மாப்பே கிழக்கு ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இதேவேளை, மஹரகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆரோவ்வல மேற்கு இன்று அதிகாலை 5 மணி முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். இதேவேளை, அம்பாறை மற்றும் குருநாகல் மாவட்டங்களில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த சில பகுதிகள் விடுவிக்கப்பட்டுள்ளன. அம்பாறை - உஹன பொலிஸ் பிரிவிலுள்ள குமாரிகம கிராம உத்தியோகத்தர் பிரிவு தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளது. குருநாகல் மாவட்டத்தின் குளியாபிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 82 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் 63 பிரிவுகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன. ஏனைய 19 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் என இராணுவத் தளபதி கூறினார்.