நயினாதீவு நாக விகாரையில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த தேசிய வெசாக் நிகழ்வு இரத்து

நயினாதீவு நாக விகாரையில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த தேசிய வெசாக் நிகழ்வு இரத்து

நயினாதீவு நாக விகாரையில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த தேசிய வெசாக் நிகழ்வு இரத்து

எழுத்தாளர் Staff Writer

08 May, 2021 | 3:16 pm

Colombo (News 1st) யாழ்ப்பாணம் – நயினாதீவு நாக விகாரையில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்த தேசிய வெசாக் நிகழ்வு இரத்து செய்யப்பட்டுள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வழங்கப்பட்ட ஆலோசனைக்கு அமைய நிகழ்வு இரத்து செய்யப்பட்டுள்ளது.

எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் ஒரு வாரத்தை அரச வெசாக் வாரமாக முன்னெடுக்க திட்டமிடப்பட்டிருந்ததுடன், பிரதான நிகழ்வை யாழ்ப்பாணம் நயினாதீவில் நடத்த புத்தசாசன அமைச்சு திட்டமிட்டிருந்தது.

தற்போது நிலவும் கொரோனா நிலையை கருத்திற்கொண்டு வெசாக் பண்டிகையை வீடுகளிலேயே கொண்டாடுமாறு புத்த சாசன அமைச்சின் செயலாளர் கபில குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்