இந்தோனேசிய தூதுவர் - எதிர்க்கட்சித் தலைவர் இடையில் சந்திப்பு

by Bella Dalima 07-05-2021 | 8:14 PM
Colombo (News 1st) இந்தோனேசிய தூதுவர் குஸ்தி நுங்ரா ஆர்டியாசாவிற்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கும் இடையிலான விசேட சந்திப்பு கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றது. COVID தொற்றினால் இந்தோனேசியாவும் பாரிய பாதிப்புகளை எதிர்நோக்கியுள்ளதுடன், முக்கிய தீர்வாக நோயெதிர்ப்பு சக்தி வேலைத்திட்டத்தை நாட்டில் நடைமுறைப்படுத்துவதற்கு தாம் முன்னுரிமை அளித்ததாக, இந்தோனேசிய தூதுவர் எதிர்க்கட்சித் தலைவரிடம் தெரிவித்துள்ளார். இலங்கையின் நிலைமை தொடர்பில் இந்தோனேசியத் தூதுவருடன் எதிர்க்கட்சித் தலைவர் கலந்துரையாடியுள்ளார்.