மேலும் இரு கிராம சேவகர் பிரிவுகள் முடக்கப்பட்டன

மேலும் இரு கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டன

by Chandrasekaram Chandravadani 06-05-2021 | 6:32 AM
Colombo (News 1st) இரண்டு மாவட்டங்களிலுள்ள மேலும் இரு கிராம சேவகர் பிரிவுகள் இன்று (06) காலை 06 மணி முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார். அந்தவகையில், நுவரெலியா மாவட்டத்தின் கொத்மலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பனன்கம கிராம உத்தியோகத்தர் பிரிவு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன், திருகோணமலை மாவட்டத்தின் திருகோணமலை பொலிஸ் பிரிவின் கீழுள்ள சுபத்ராலங்கா மாவத்தை கிராம உத்தியோகத்தர் பிரிவு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.