நாட்டில் மேலும் 14 கொரோனா மரணங்கள்

நாட்டில் மேலும் 14 கொரோனா மரணங்கள்

by Chandrasekaram Chandravadani 06-05-2021 | 7:00 AM
Colombo (News 1st) நேற்றைய தினம் (05) 14 கொரோனா மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டன. இதன் பிரகாரம், நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 734 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார். ஹிங்குரக்கொட, பொலன்னறுவை, கோணபல, புளத்கொஹுபிட்டிய, தெவனகல, கல்லேல்ல, திறப்பனை, வத்தளை, களுத்துறை, பயாகல, பேராதனை, குரண, தும்மலசூரிய மற்றும் கிரிபத்கும்புர ஆகிய பிரதேசங்களை சேர்ந்த 13 பேரே இவ்வாறு கொரோனா தொற்றுக்குள்ளாகி மரணித்துள்ளனர்.