by Staff Writer 06-05-2021 | 9:01 AM
Colombo (News 1st) கேகாலை தம்மிக்க பண்டார தயாரித்த தம்மிக்க மூலிகைப் பானம், கொரோனா நோயாளர்களுக்கு சிகிச்சை வழங்க தகுந்ததல்ல என நிபுணர் குழுவினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த மூலிகைப் பானம் குறித்து பரிசோதிப்பதற்காக சுகாதார அமைச்சின் பேராசிரியர்கள் கொண்ட குழு நியமிக்கப்பட்டிருந்தது.
கொரோனா நோயாளர்களுக்கு சிகிச்சை வழங்க, தம்மிக்க மூலிகைப் பானம் தகுந்ததல்ல என குறித்த நிபுணர் குழு அறிக்கையில் தெரிவித்துள்ளது.