20 ரயில் சேவைகள் தற்காலிகமாக இரத்து

தபால் ரயில் உள்ளிட்ட 20 ரயில் சேவைகள் தற்காலிகமாக இரத்து

by Staff Writer 06-05-2021 | 3:49 PM
Colombo (News 1st) இன்று (06) இரவு பயணிக்கவிருந்த தபால் ரயில் உள்ளிட்ட 20 ரயில் சேவைகள் தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று நிலைமையின் மத்தியில் ரயில்களில் பயணிப்போரின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க, இன்றிரவு சேவையில் ஈடுபடவிருந்த கொழும்பு - பதுளை, கொழும்பு - திருகோணமலை, கொழும்பு - காங்கேசன்துறை இரவுநேர தபால் ரயில்கள் தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் கொழும்பு - வேயங்கொட, கொழும்பு - மீரிகம, கொழும்பு - அம்பேபுஸ்ஸ, கொழும்பு - பாணந்துறை, காலி - அளுத்கம மற்றும் அளுத்கம - காலி ரயில் சேவைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.