சில பகுதிகளில் கடும் மழை பெய்யக்கூடும்

சில பகுதிகளில் கடும் மழை பெய்யக்கூடும்

by Staff Writer 06-05-2021 | 3:54 PM
Colombo (News 1st) மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், ஊவா மற்றும் தென் மாகாணங்களின் சில பகுதிகளில் 100 மில்லிமீட்டருக்கும் அதிகமான கடும் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மன்னார், அநுராதபுரம், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்யக்கூடும். இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் இடி மின்னல் தாக்கங்களில் இருந்து பாதுகாப்பு பெறுவதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

ஏனைய செய்திகள்