Colombo (News 1st) களுத்துறை சிறைச்சாலை வளாகத்தினுள் 4 வெவ்வேறு பொதிகளில் வீசப்பட்டிருந்த போதைப்பொருட்களும் கையடக்க தொலைபேசிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
குறித்த பொதிகளில் 142 போதை வில்லைகளும் ஐஸ் போதைப்பொருளும் கஞ்சாவும் ஹெரோயினும் இருந்ததாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.
கைப்பற்றப்பட்ட பொருட்கள் மேலதிக விசாரணைகளுக்காக களுத்துறை வடக்கு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
