by Staff Writer 06-05-2021 | 9:35 AM
Colombo (News 1st) உயர் நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றங்களின் வழக்கு விசாரணைகளை இன்று (06) முதல் எதிர்வரும் 14 ஆம் திகதி வரை நடத்தாமல் இருப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
COVID - 19 நிலைமை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
எனினும், சட்டத்தரணிகளின் கோரிக்கைகளுக்கு ஏற்ப அத்தியவசியமான வழக்குகளை மாத்திரம் விசாரணைகளுக்கு எடுத்துக் கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.