COVID-19: மேலும் 11 பேர் உயிரிழப்பு

COVID-19: மேலும் 11 பேர் உயிரிழப்பு, இன்று 1259 பேருக்கு தொற்று

by Staff Writer 05-05-2021 | 6:13 PM
  Colombo (News 1st): COVID-19 தொற்றுக்குள்ளான மேலும் 11 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்கள் அனைவரும் நேற்று (04) உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. அவர்களில் 10 பேர் COVID நிமோனியாவினால் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. அதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 720 ஆக அதிகரித்துள்ளது. இன்று இதுவரையான காலப்பகுதியில் 1259 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா குறிப்பிட்டார். அதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 1,16,849 ஆக அதிகரித்துள்ளது. COVID-19 தொற்றுக்குள்ளானவர்களில் 922 பேர் இன்று குணமடைந்துள்ளனர். நாட்டில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,00,075 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றுக்குள்ளானோரில் 16,065 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.