ரிஷாட் பதியுதீனை பாராளுமன்றத்திற்கு அழைத்துவர முடியாது - சரத் வீரசேகர 

by Staff Writer 05-05-2021 | 12:33 PM
Colombo (News 1st) பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனை பாராளுமன்றத்திற்கு அழைத்து வருவதற்கு அனுமதி வழங்க வேண்டாம் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர், கலாநிதி சரத் வீரசேகர வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், விசாரணைகளுக்கு இடையூறு ஏற்படும் என்பதால் அழைத்துவர முடியாது என அமைச்சர் இதன்போது கூறினார். அமைச்சரின் இந்த கருத்து தொடர்பில் எதிர்க்கட்சியினர் சபையில் எதிர்ப்பை வெளியிட்டனர்.