நாட்டின் மேலும் சில பகுதிகள் முடக்கப்பட்டன

நாட்டின் மேலும் சில பகுதிகள் முடக்கப்பட்டன

by Chandrasekaram Chandravadani 05-05-2021 | 7:17 AM
Colombo (News 1st) நாட்டில் மேலும் சில பிரதேசங்கள் இன்று (05) காலை முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார். அதனடிப்படையில், வவுனியா மாவட்டத்தின் பூவரசன்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குருக்கள்புதுக்குளம் (208A) கிராம உத்தியோகத்தர் பிரிவு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. கொழும்பு மாவட்டத்தின் மஹரகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பமுனுவ கிராம உத்தியோகத்தர் பிரிவு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. கொழும்பு மாவட்டத்தின் பிலியந்த​லை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹொன்னத்தர (585A, 585) கிராம உத்தியோகத்தர் பிரிவு மற்றும் தெல்தர (569, 569A) கிராம ​​சேவகர் பிரிவு ஆகியன தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இவை தவிர கம்பஹா மாவட்டத்தின் கிரிந்திவெல பொலிஸ் பிரிவின் கீழுள்ள குட்டிவில கிராம உத்தியோகத்தர் பிரிவு முடக்கப்பட்டுள்ளது. இரத்தினபுரி மாவட்டத்தின் எம்பிலிப்பிட்டி பொலிஸ் பிரிவின் பல்லேகம (214A), உடகம (214), Newtown (214G) ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இரத்தினபுரி மாவட்டத்தின் பனாமுர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வலல்கொட (213), சூதுகல (212A) மற்றும் பனாமுர (213B) ஆகிய கிராம சேவகர் பிரிவுகள் மற்றும் வேவல்வத்தை பொலிஸ் பிரிவில் ரத்கம (162F) கிராம சேவகர் பிரிவு ஆகியன முடக்கப்பட்டுள்ளன.