நாட்டின் சில இடங்களில் மாலை வேளையில் மழை

நாட்டின் சில இடங்களில் மாலை வேளையில் மழை

by Staff Writer 05-05-2021 | 2:07 PM
Colombo (News 1st) நாட்டின் சில பகுதிகளில் இன்று (05) மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களின் சில பகுதிகளிலும் 75 மில்லிமீற்றர் வரை மழை பெய்யலாம் என திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இதேவேளை, நேற்று (04) மாலை வீசிய பலத்த காற்றினால் கிளிநொச்சி - ஸ்கந்தபுரத்தில் வீடொன்று சேதமடைந்துள்ளது. இதனிடையே, நேற்று பிற்பகல் பெய்த மழை காரணமாக கம்பளை - நுவரெலியா பிரதான வீதியின் சில பகுதிகளில் மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளதாக நியூஸ்பெஸ்ட்டின் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.