by Staff Writer 04-05-2021 | 12:54 PM
Colombo (News 1st) கொழும்பு துறைமுக நகர விசேட வர்த்தக ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு பாராளுமன்றத்திற்கு கிடைக்காமையால், நாளை (05) நடைபெறவிருந்த விவாதம் ஒத்திவைக்கப்பட்டது.
இந்த விடயத்தை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன நியூஸ்பெஸ்ட்டுக்கு உறுதிப்படுத்தினார்.