இன்று இதுவரை 1,150 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

இன்று (04) இதுவரை 1,150 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

by Staff Writer 04-05-2021 | 6:07 PM
Colombo (News 1st) இன்று (04) இதுவரை 1,150 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 1,14,826 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளாகிய 944 பேர் இன்று குணமடைந்துள்ளனர். நாட்டில் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 99,153 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா நோயாளர்கள் 709 பேர் இதுவரை உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது. கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 14 ,964 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.