மிருகக்காட்சி சாலை, Safari பூங்காக்களுக்கு பூட்டு

மிருகக்காட்சி சாலைகள், Safari பூங்காக்களை மூட தீர்மானம்

by Staff Writer 03-05-2021 | 5:54 PM
Colombo (News 1st) தேசிய உயிரியல் பூங்கா திணைக்களத்திற்குட்பட்ட அனைத்து மிருகக்காட்சி சாலைகள், சபாரி (Safari) பூங்காக்கள் மற்றும் யானைகள் சரணாலயங்களையும் நாளை (04) முதல் மறு அறிவித்தல் வரை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய தெஹிவளை மிருகக்காட்சி சாலை, பின்னவல யானைகள் சரணாலயம், பின்னவல பூங்கா மற்றும் ரிதியகம சபாரி பூங்கா (Safari Park) என்பன நாளை (04) முதல் மூடப்படவுள்ளன.