9 கொரோனா மரணங்கள் பதிவாகிய பிரதேசங்கள்

9 கொரோனா மரணங்கள் பதிவாகிய பிரதேசங்கள்

by Staff Writer 02-05-2021 | 1:42 PM
Colombo (News 1st) நாட்டில் நேற்றைய தினம் (01) 9 கொரோனா மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டன. இவர்களில் 8 ஆண்களும் பெண்ணொருவரும் அடங்குகின்றனர். கரதன, அவிசாவளை, ருவன்வெல்ல, தேவாலகம, மாவனெல்ல, யக்வில, வலப்பனை, இரத்தினபுரி மற்றும் குளியாப்பிட்டி ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களே தொற்றினால் உயிரிழந்துள்ளனர். இதனடிப்படையில் நாட்டில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 687 ஆக பதிவாகியுள்ளது.