Colombo (News 1st) நாட்டில் நேற்றைய தினம் (01) 9 கொரோனா மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டன.
இவர்களில் 8 ஆண்களும் பெண்ணொருவரும் அடங்குகின்றனர்.
கரதன, அவிசாவளை, ருவன்வெல்ல, தேவாலகம, மாவனெல்ல, யக்வில, வலப்பனை, இரத்தினபுரி மற்றும் குளியாப்பிட்டி ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களே தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.
இதனடிப்படையில் நாட்டில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 687 ஆக பதிவாகியுள்ளது.