போலி காசோலைகள் மூலம் 430 இலட்சம் ரூபா பணம் மோசடி

போலி காசோலைகள் மூலம் 430 இலட்சம் ரூபா பணம் மோசடி; நால்வர் கைது

by Staff Writer 02-05-2021 | 1:58 PM
Colombo (News 1st) நாட்டின் முன்னணி உருக்குக்கம்பி தயாரிப்பு நிறுவனமொன்றிற்கு சொந்தமான தனியார் வங்கிக் கணக்கிலிருந்து, போலி காசோலைகள் மூலம் 430 இலட்சம் ரூபா பணத்தை பெற்றுக்கொண்ட சந்கேநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் 4 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.