விருந்துபசார நிகழ்வுகளை வீடுகளில் நடத்த தடை

கூட்டங்கள், விருந்துபசார நிகழ்வுகளை வீடுகளில் நடத்த தடை 

by Staff Writer 02-05-2021 | 5:16 PM
Colombo (News 1st) தடை விதிக்கப்பட்டுள்ள கூட்டங்கள், விருந்துபசார நிகழ்வுகள் மற்றும் திருமண வைபவங்கள் உள்ளிட்ட நிகழ்வுகளை வீடுகளிலோ அல்லது வேறு இடங்களிலோ நடத்த முடியாது என இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார். இதனிடையே, கொரோனா தொற்று கட்டுப்பாட்டுக்குள் வரும் வரை வேறு வீடுகளுக்கு செல்வதையும் உறவினர்களை சந்திப்பதையும் தற்காலிகமாக தவிர்க்குமாறு இராணுவத் தளபதி பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.