தொடர்ச்சியாக நகைத் திருட்டில் ஈடுபட்ட ஐவர் கைது

தொடர்ச்சியாக நகைத் திருட்டில் ஈடுபட்ட ஐவர் முல்லைத்தீவில் கைது

by Staff Writer 01-05-2021 | 5:43 PM
Colombo (News 1st) தொடர்ச்சியாக நகைத் திருட்டில் ஈடுபட்டு வந்த ஐவர் முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய பகுதிகளில் சுமார் 150 பவுன் நகைகளை திருடியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாணம் மற்றும் புதுக்குடியிருப்பு பகுதிகளைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவரே கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர். சந்தேகநபர்களில் 17, 26, 31 வயதுடைய 03 ஆண்களும் 21 , 35 வயதுடைய இரு பெண்களும் உள்ளடங்குகின்றனர். இவர்கள் கடந்த 03 வருடங்களாக திருட்டில் ஈடுபட்டுள்ளமை தெரியவந்துள்ளது. இவர்கள் புதுக்குடியிருப்பு பகுதியில் மாத்திரம் 09 வீடுகளை உடைத்து கொள்ளையிட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளினூடாக சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இவர்களால் திருடப்பட்ட பல நகைகள் வங்கிகளில் அடகு வைக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. சந்தேகநபர்களை இன்று முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.