கல்முனையில் மின்னல் தாக்கி மீனவர்கள் இருவர் உயிரிழப்பு

by Staff Writer 01-05-2021 | 3:15 PM
Colombo (News 1st) கல்முனை கடற்பரப்பில் மின்னல் தாக்கி இரண்டு மீனவர்கள் உயிரிழந்துள்ளனர். மின்னல் தாக்கியதில் மேலும் இரண்டு பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சாய்ந்தமருதிலிருந்து நேற்று முன்தினம் (29) கடற்றொழிலுக்கு சென்றவர்களே மின்னல் தாக்கத்திற்கு இலக்காகியுள்ளனர். சடலங்கள் நேற்றிரவு கரைக்கு கொண்டு வரப்பட்டதுடன், காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சாய்ந்தமருதை சேர்ந்த 32 மற்றும் 41 வயதான இரண்டு மீனவர்களே மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளனர். சடலங்கள் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், காயமடைந்தவர்கள் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கல்முனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.