இன்று (01) காலை முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகள்

by Staff Writer 01-05-2021 | 3:21 PM
Colombo (News 1st) நாட்டின் மேலும் சில கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், குறித்த கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். இதனடிப்படையில், கொழும்பு மாவட்டத்தின் பிலியந்தலை பொலிஸ் பிரிவின் நாம்பமுனுவ மற்றும் கொரக்கபிட்டிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. காலி மாவட்டத்தின் அம்பலன்கொட பொலிஸ் பிரிவின் கொடஹேன மற்றும் தல்கஸ்கொட கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்தார். அம்பாறை மாவட்டத்தின் தெஹியத்தகண்டிய பொலிஸ் பிரிவின் தெஹியத்தகண்டிய மற்றும் கதிராபுர கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இரத்தினபுரி மாவட்டத்தின் கலவான பொலிஸ் பிரிவின் ஹப்புகொட கிராம உத்தியோகத்தர் பிரிவும் இன்று காலை முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் அப்பகுதியிலிருந்து வௌியேற வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.