அழுகி வீணாகும் பூசணி செய்கை

அழுகி வீணாகும் பூசணி: சந்தைப்படுத்த முடியாமல் விவசாயிகள் சிரமம்

by Staff Writer 01-05-2021 | 7:59 PM
Colombo (News 1st) கிளிநொச்சி - கண்ணகைபுரம் பகுதியில் அதிகளவு பூசணி செய்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. கொரோனா காரணமாக தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம் மூடப்பட்டுள்ளதால் தமது அறுவடையை சந்தைப்படுத்த முடியாமல் விவசாயிகள் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர். இரண்டு நாட்களுக்கு ஒரு தடவை தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு 2,000 தொடக்கம் 3,000 கிலோ வரையான பூசணியை இவர்கள் விநியோகித்து வந்தனர். தற்போது கொரோனா அச்சம் காரணமாக தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம் மூடப்பட்டுள்ளதால், தங்களின் விளைச்சல் அழுகி நாசமாவதாக விவசாயிகள் குறிப்பிட்டனர்.