பாடசாலைகளை 7 ஆம் திகதி வரை மூட தீர்மானம்

அனைத்து பாடசாலைகளையும் 7 ஆம் திகதி வரை தொடர்ந்தும் மூட தீர்மானம்

by Staff Writer 01-05-2021 | 3:09 PM
Colombo (News 1st) நாட்டின் அனைத்து பாடசாலைகளையும் எதிர்வரும் 7 ஆம் திகதி வரை தொடர்ந்தும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் G.L. பீரிஸ் அறிவித்துள்ளார். நாட்டின் COVID நிலைமையால் 3 ஆம் திகதி முதல் எதிர்வரும் 7 ஆம் திகதி வரை பாடசாலைகளை திறப்பது பொருத்தமற்றது என்பதால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.