திருமணம் உள்ளிட்ட அனைத்து நிகழ்வுகளும் இரத்து

3 ஆம் திகதி முதல் 2 வாரங்களுக்கு திருமணம் உள்ளிட்ட அனைத்து நிகழ்வுகளுக்கும் தடை

by Staff Writer 30-04-2021 | 3:20 PM
Colombo (News 1st) எதிர்வரும் திங்கட்கிழமையின் (03) பின்னர் இரண்டு வாரங்களுக்கு பொது நிகழ்வுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில், திருமணம் உள்ளிட்ட அனைத்து நிகழ்வுகளையும் இரத்து செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். இதனிடையே, கடந்த 24 மணித்தியாலங்களில் கொழும்பு மாவட்டத்திலேயே அதிக கொரோனா நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.