யாழ். குடத்தனையில் கட்டளையை மீறி பயணித்த லொறி மீது கடற்படையினர் துப்பாக்கிச்சூடு

by Staff Writer 30-04-2021 | 3:50 PM
Colombo (News 1st) யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு குடத்தனை பகுதியில் கட்டளையை மீறி பயணித்த லொறி மீது கடற்படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர் இன்று அதிகாலை 12.30-க்கு துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டதாக கடற்படை பேச்சாளர் கெப்டன் இந்திக டி சில்வா குறிப்பிட்டார். துப்பாக்கிச்சூட்டில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் லொறிக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட லொறி இன்று காலை குடத்தனை பகுதியிலுள்ள வீடொன்றுக்கு அருகில் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் கடற்படை பேச்சாளர் குறிப்பிட்டார். எனினும், லொறியில் பயணித்தவர்கள் தலைமறைவாகியுள்ளதாக அவர் கூறினார். லொறியில் கொண்டு செல்லப்பட்ட பொருட்கள் குறித்து தேடுதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸாருடன் இணைந்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக கடற்படை பேச்சாளர் கெப்டன் இந்திக டி சில்வா குறிப்பிட்டார்.