சீனாவின் அபிலாஷைகளுக்கு இலங்கை ஒத்துழைக்கும்

சீனாவின் அடிப்படை அபிலாஷைகளுக்கு இலங்கை ஒத்துழைக்கும்: ஜனாதிபதி தெரிவித்ததாக தகவல்

by Staff Writer 30-04-2021 | 8:23 PM
Colombo (News 1st) இலங்கை சீனாவுடன் இருதரப்பு உறவுகளை பலப்படுத்துவதற்கு முன்னுரிமையளித்துள்ளதாகவும் சீனாவின் அடிப்படை அபிலாஷைகளுக்கு உயர் மட்டத்தில் ஒத்துழைப்பு வழங்குவதாகவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளதாக Xinhua News Agency இன்று தகவல் வௌியிட்டுள்ளது. சீன பாதுகாப்பு அமைச்சர் Wei Fenghe உடன் நடைபெற்ற கலந்துரையாடலில் ஜனாதிபதி இதனைக் கூறியதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கை சுயாதீன வௌிநாட்டுக் கொள்கையை கடைப்பிடிப்பதாகவும் வலயத்திற்கு வௌியில் உள்ள உலகின் அதிகாரமிக்கவர்களின் அதிகாரத்திற்கு அடிபணியப் போவதில்லையெனவும் எந்தவொரு நாட்டுடனும் கூட்டிணைவதில்லையெனவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ குறிப்பிட்டதாக Xinhua செய்தி வௌியிட்டுள்ளது.

ஏனைய செய்திகள்