இலங்கை உள்ளிட்ட அயல் நாடுகளுக்கு ஜூலை வரை COVID தடுப்பூசிகளை வழங்க இயலாது என இந்தியா அறிவிப்பு

by Staff Writer 30-04-2021 | 7:33 PM
Colombo (News 1st) இலங்கை, பங்களாதேஷ், நேபாளம் உள்ளிட்ட இந்தியாவின் அயல் நாடுகளுக்கு எதிர்வரும் ஜூலை மாதம் வரைக்கும் தடுப்பூசி வழங்குவது பெரும்பாலும் சிரமமாக இருக்கும் என இந்திய வௌியுறவுத்துறை அமைச்சின் செயலாளர் ஹர்ஷ் ஷ்ரிங்லாவை மேற்கோள்காட்டி த ஹிந்து பத்திரிகை செய்தி வௌியிட்டுள்ளது. இலங்கை தற்போதைக்கு 1.5 மில்லியன் astrazeneca தடுப்பூசிகளைக் கோரியிருந்தாலும் இதுவரை 5 இலட்சம் தடுப்பூசிகளே கிடைத்துள்ளன.