முதற்தடவையாக முடக்கப்படும் துருக்கி

முதற்தடவையாக முடக்கப்படும் துருக்கி

by Staff Writer 29-04-2021 | 11:05 AM
Colombo (News 1st) துருக்கி முதற்தடவையாக முடக்கப்படவுள்ளது. கொரோனா தொற்று அதிகரித்து செல்வதை முன்னிட்டு இன்று (29) மாலை முதல் நாடு முடக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக, வீதிகள் மற்றும் வர்த்தக நிலையங்களில் மக்கள் செறிந்து காணப்படுவதாக அந் நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. எவ்வாறாயினும், எதிர்வரும் நாட்களில் எவ்வாறு செயற்பட வேண்டும் என வட்ஸ்அப் செயலியூடாக மக்களுக்கு அறிவுறுத்தப்படுகின்றது. துருக்கியில் 4.75 மில்லியன் மக்களுக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டதுடன், 39000 இற்கும்  மேற்பட்ட கொரோனா மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டன. நேற்று (28) மாத்திரம் சுமார் 43,000 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.