Colombo (News 1st) அனைத்து பள்ளிவாசல்களிலும் ஜூம்ஆ தொழுகை, தராவீஹ் உள்ளிட்ட அனைத்து கூட்டு செயற்பாடுகளும் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
COVID -19 நிலைமையை கருத்திற்கொண்டு, சுகாதார அதிகாரிகளிள் ஆலோசனைக்கு ஏற்ப இலங்கை வக்பு சபை இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும் ஐவேளை தொழுகைகளில் ஒரு பள்ளிவாசலில் 25 பேர் மாத்திரம் கலந்துகொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அவர்கள் கட்டாயம் சுகாதார வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் எனவும் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.