திருகோணமலையில் மேலும் சில பகுதிகள் முடக்கப்பட்டன

திருகோணமலையில் மேலும் சில பகுதிகள் முடக்கப்பட்டன

by Staff Writer 29-04-2021 | 7:45 AM
Colombo (News 1st) திருகோணமலை மாவட்டத்தின் மேலும் சில கிராம சேவகர் பிரிவுகள் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார். அதனடிப்படையில், திருகோணமலை - உப்புவௌி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுமேதகம்புர, மூதோவி, லிங்கநகர் மற்றும் கோவிலடி ஆகிய கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இவைதவிர, சீனன்குடா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கவட்டிக்குடா மற்றும் சீனன்குடா ஆகிய கிராம சேவகர் பிரிவுகள் முடக்கப்பட்டுள்ளன.