English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
29 Apr, 2021 | 5:00 pm
Colombo (News 1st) பொலிஸ் மற்றும் முப்படையில் உயிரிழந்த உறுப்பினர்களுக்காக வழங்கப்படும் கொடுப்பனவுகளை அவர்களின் மனைவிகளுக்கு ஆயுட் காலத்திற்கும் செலுத்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை இதற்கான அனுமதியை அமைச்சரவை வழங்கியதாக பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்தார்.
இந்த விடயம் தொடர்பில் கடந்த காலங்களில் பாதுகாப்பு பிரிவினரின் மனைவிமார்களால் அரசாங்கத்திடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்ததாகவும் அவர் கூறினார்.
இதேவேளை, யுத்த காலத்தில் உயிரிழந்த திருமணமாகாத உறுப்பினர்களுக்காக, அவர்களின் பெற்றோர்களுக்கு மாதாந்தம் 25,000 ரூபா கொடுப்பனவு வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், யுத்தத்தால் அங்கவீனமுற்று சேவையிலிருந்து விலகியுள்ள முப்படை உறுப்பினர்களுக்கு தற்போது வழங்கப்படும் மாதாந்த கொடுப்பனவை, அவர்கள் இறந்த பின்னர் குடும்பத்தில் தங்கி வாழ்வோருக்கு வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் கூறினார்.
யுத்த காலத்தை தவிர்ந்த ஏனைய சுற்றிவளைப்பின் போது அங்கவீனமுற்ற படையினர் தொடர்பில் விசேட குழுவினூடாக ஆராய்ந்து நிவாரணங்களை வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
04 Nov, 2022 | 11:55 AM
17 Aug, 2021 | 10:32 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS