மேலும் சில கிராம சேவகர் பிரிவுகள் முடக்கப்பட்டன

by Chandrasekaram Chandravadani 28-04-2021 | 8:36 AM
Colombo (News 1st) நாட்டில் மேலும் சில கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார். அதனடிப்படையில், வெல்லவாய - வெஹெரயாய மற்றும் கொட்டன்கஹபொக்குன கிராம சேவகர் பிரிவுகள் முடக்கப்பட்டுள்ளன. புத்தல - ரத்தலகம கிராம சேவகர் பிரிவு முடக்கப்பட்டுள்ளது. அத்துடன், அம்பாறை மாவட்டத்தின் உஹன - குமாரிகம கிராம சேகவர் பிரிவு மற்றும் மாத்தறை மாவட்டத்தின் நாவுல - அலுகொல்ல ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவு ஆகியன தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. குறித்த கிராம சேவகர் பிரிவுகள் இன்று (28) காலை 6 மணி தொடக்கம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி குறிப்பிட்டார்.