ஜனாதிபதி - சீன பாதுகாப்பு அமைச்சர் இடையே கலந்துரையாடல் 

by Staff Writer 28-04-2021 | 12:13 PM
Colombo (News 1st) நாட்டிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள சீன பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் வெய் ஃபெங்ஹ (Wei Fenghe), ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவை சந்தித்தார். ஜனாதிபதி செயலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இரு நாடுகளுக்குமிடையிலான முக்கிய விடயங்கள் தொடர்பில் இங்கு கலந்துரையாடப்பட்டது. சீனப் பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் வெய் ஃபெங்ஹ, உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்றிரவு (27) நாட்டை வந்தடைந்தார்.