உயர்தர பரீட்சை பெறுபேறுகள் ஒரு வாரத்தில் வௌியாகும்

உயர்தர பரீட்சை பெறுபேறுகள் ஒரு வாரத்தில் வௌியாகவுள்ளது 

by Staff Writer 28-04-2021 | 3:48 PM
Colombo (News 1st) 2020 ஆம் ஆண்டிற்கான கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை 7 நாட்களுக்குள் வௌியிட முடியும் என கல்வி அமைச்சர் பேராசிரியர் G.L. பீரிஸ் தெரிவித்தார். இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் இதனை தெரிவித்தார். கடந்த வருடத்தில் நவம்பர் மாதத்தில் இடம்பெற்ற உயர்தர பரீட்சைக்கு 3,62,000  மாணவர்கள் தோற்றினர்.