by Staff Writer 28-04-2021 | 7:55 AM
Colombo (News 1st) அதிவேக வீதியின் கொட்டாவ நுழைவாயிலில் பணியாற்றும் ஊழியர்கள் மூவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, இன்று (28) காலை 6 மணி முதல் மறு அறிவித்தல் வரை அதிவேக வீதியின் கொட்டாவ நுழைவாயில், அனைத்து வாகனங்களும் உட்பிரவேசிக்கும் வகையில் திறந்திருக்கும் என அதிவேக வீதி நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், உட்பிரவேசிக்கும் வாகனங்களுக்கு பற்றுச்சீட்டு வழங்காதிருக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எனினும், கொட்டாவ நுழைவாயிலிலிருந்து வௌியேறுவதற்கு பஸ்கள் மற்றும் அம்பியூலன்ஸ் வாகனங்களுக்கு மாத்திரமே அனுமதி வழங்கப்படவுள்ளது.
இதனால், அதிவேக வீதியிலிருந்து வௌியேறுவதற்கு கொட்டாவ நுழைவாயிலை பயன்படுத்தாமல் மாற்று வீதியாக அத்துருகிரிய மற்றும் கஹதுட்டுவ நுழைவாயிலை பயன்படுத்துமாறு சாரதிகள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.