தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனம் விடுத்துள்ள அறிவுறுத்தல்

தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனம் விடுத்துள்ள அறிவுறுத்தல்

தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனம் விடுத்துள்ள அறிவுறுத்தல்

எழுத்தாளர் Staff Writer

28 Apr, 2021 | 10:12 am

Colombo (News 1st) தொலைபேசியூடாக நாளொன்றை ஒதுக்கியவர்களுக்கு மாத்திரமே, எதிர்வரும் நாட்களில் மருத்துவ சான்றிதழை வழங்குவதாக தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனம் தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்று அதிகரித்து வருவதை கவனத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக நிறுவனத்தின் தலைவர், வைத்தியர் ஷவேந்திர கமகே குறிப்பிட்டுள்ளார்.

மருத்துவ சான்றிதழை பெற்றுக்கொள்வதற்கான திகதியை ஒதுக்குவதற்காக இரண்டு விசேட தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

கைடயக்கத் தொலைபேசியூடாக 225 எனும் இலக்கத்திற்கும் தொலைபேசி ஊடாக 1225 எனும் இலக்கத்திற்கும் அழைப்பினை ஏற்படுத்தி நாளொன்றையும் நேரத்தையும் ஒதுக்கிக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்