மேலும் இரு கிராம சேவகர் பிரிவுகள் முடக்கப்பட்டன

மேலும் இரு கிராம சேவகர் பிரிவுகள் முடக்கப்பட்டன

by Staff Writer 27-04-2021 | 7:48 AM
Colombo (News 1st) மாத்தளை மற்றும் பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களில் இரண்டு கிராம சேவையாளர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கமைய, மாத்தளை மாவட்டத்தின் உக்குவெல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பல்லேக்கும்புர கிராம சேவையாளர் பிரிவு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன், பொலன்னறுவை மாவட்டத்தின் ஹிங்குரக்கொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிறிக்கெத்த கிராம சேவையாளர் பிரிவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.