நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை

நாடளாவிய ரீதியில் அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை 

by Staff Writer 27-04-2021 | 1:46 PM
Colombo (News 1st) நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் முன்பள்ளிகளுக்கும் பிரிவெனாக்களுக்கும் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விடுமுறை வழங்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது. இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார். மாணவர்களின் சுகாதாரத்திற்கு முன்னுரிமை வழங்கியே இந்த தீர்மானம் எடுக்கப்படுவதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் குறிப்பிட்டார்.    

ஏனைய செய்திகள்