Colombo (News 1st) கொரோனா வைரஸ் தொற்றானது தற்போது அபாய நிலையை எட்டியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அத்தியாவசிய தேவைகள் தவிர்ந்த பயணங்களை தவிர்க்குமாறு அவர் பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளார்.
இதேவேளை, இலங்கையில் இதுவரை 102,376 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.