by Staff Writer 27-04-2021 | 1:17 PM
Colombo (News 1st) திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படுவதாக கிழக்கு மாகாண ஆளுநர் குறிப்பிட்டார்.
அத்தோடு, அம்பாறை மாவட்டத்தின் அம்பாறை மற்றும் மஹஓயா ஆகிய கல்வி வலயங்களுக்குட்பட்ட அனைத்து பாடசாலைகளுக்கும் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்படுவதாக கிழக்கு மாகாண ஆளுநர் குறிப்பிட்டார்.