Colombo (News 1st) நேற்றைய தினம் (24) மேலும் 4 கொரோனா மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
கொழும்பு - 02, ரத்கம, குளியாப்பிட்டி மற்றும் கொழும்பு - 04 ஆகிய பகுதிகளை வதிவிடமாக கொண்ட நால்வரே இவ்வாறு கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனடிப்படையில், நாட்டில் உறுதி செய்யப்பட்டுள்ள கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 642 ஆக அதிகரித்துள்ளது.