ஈராக் கொரோனா வைத்தியசாலையில் தீ; 82 பேர் பலி

ஈராக் கொரோனா வைத்தியசாலையில் தீ; 82 பேர் உயிரிழப்பு

by Staff Writer 25-04-2021 | 6:15 PM
Colombo (News 1st) ஈராக் தலைநகர் பக்தாத் நகரிலுள்ள கொரோனா நோயாளர்களுக்கு சிகிச்சை வழங்கும் வைத்தியசாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 82 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த தீ விபத்தில் நூற்றுக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஒக்சிசன் சிலிண்டரில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக தீ பற்றியதாக தகவல்கள் வௌியாகியுள்ளன. இந்த சோகமான விபத்து தொடர்பில் உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்குமாறு அந் நாட்டு பிரதமர் முஸ்தபா அல் கதிமி (Mustafa al-Kadhimi) பணிப்புரை விடுத்துள்ளார்.