அடையாளம் காணப்படுவது கென்ட் திரிபாக இருக்கலாம்

நாட்டில் தற்போது அடையாளம் காணப்படுவது பிரித்தானியாவின் கென்ட் கொரோனா திரிபாக இருக்கலாம்

by Bella Dalima 24-04-2021 | 3:33 PM
Colombo (News 1st) தற்போது நாட்டில் அடையாளம் காணப்பட்டுள்ள புதிய வகை கொரோனா வைரஸ் பிரித்தானியாவின் கென்ட் ( Kent) பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட வைரஸை ஒத்ததாகக் காணப்படுவதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்தார். புதிய கொரோனா வைரஸின் தன்மையை எதிர்வரும் நாட்களில் உறுதியாகக் கண்டறிய முடியும் என அவர் கூறியுள்ளார். நிபுணர்களின் கருத்திற்கு அமைய, எதிர்வரும் புதன் அல்லது வியாழக்கிழமைக்குள் திரிபடைந்துள்ள புதிய வகை கொரோனா வைரஸின் தன்மை குறித்து உறுதியான தகவலை வௌியிட முடியும் என இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார். எவ்வாறாயினும், வழங்கப்பட்டுள்ள சுகாதார ஆலோசனைகளை உரிய வகையில் பின்பற்றுவதனூடாக வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாப்பை பெற முடியும் என இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன சுட்டிக்காட்டினார்.