தமிழகத்தில் 36 மணித்தியால ஊரடங்கு அமுல்

தமிழகத்தில் 36 மணித்தியால ஊரடங்கு அமுல்

by Bella Dalima 24-04-2021 | 4:40 PM
Colombo (News 1st) தமிழகத்தில் இன்று (24) இரவு 10 மணியிலிருந்து 36 மணித்தியால ஊரடங்கு அமுல்படுத்தப்படவுள்ளது. கொரோனா தொற்றின் உச்சநிலையைக் கருத்திற்கொண்டு தினமும் இரவு நேரத்திலும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழுநாளும் ஊரடங்கு அமுல்படுத்தப்படுமென அறிவிக்கப்பட்டிருந்தது. அதனடிப்படையில், இன்றிரவு 10 மணிக்கு அமுல்படுத்தப்படும் ஊரடங்கு திங்கட்கிழமை காலையிலேயே தளர்த்தப்படவுள்ளது. குறித்த காலப்பகுதிக்குள் அவசியத் தேவைகளின்றி மக்கள் வீடுகளை விட்டு வௌியில் வந்தால், வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுமென்பதுடன் வழக்குத் தாக்கல் செய்யப்படுமென தமிழக பொலிஸார் அறிவித்துள்ளனர். இதனிடையே, அங்கு கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக மேலும் பல கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.