கடற்றொழிலாளர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் தீர்மானங்களை மேற்கொள்ளப் போவதில்லை: டக்ளஸ் தேவானந்தா

by Staff Writer 24-04-2021 | 7:15 PM
Colombo (News 1st) கடற்றொழிலாளர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் எவ்வித தீர்மானங்களையும் மேற்கொள்ளப் போவதில்லை என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். கடற்றொழில் அமைச்சில் நேற்று (23) நடைபெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இதனைக் கூறினார். தேசிய மீனவர் மகா சம்மேளத்தின் பணிப்பாளர் சபைக் கூட்டம் நேற்று கடற்றொழில் அமைச்சில் நடைபெற்றது. இதன்போது, மீனவர்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. தன்னுடைய தவறை சுட்டிக்காட்டினால், அதில் உண்மை இருந்தால் மன்னிப்புக் கேட்கவும் தயங்கப்போவதில்லை என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இதன்போது குறிப்பிட்டார். அத்துடன், பொய்க் குற்றச்சாட்டுகளை ஒருபோதும் பொருட்படுத்தப் போவதில்லையெனவும் அவர் தெரிவித்தார்.

ஏனைய செய்திகள்