வைத்தியசாலை சென்று ஹரின் பெர்னாண்டோவை சந்தித்தார் சஜித் பிரேமதாச

by Staff Writer 23-04-2021 | 8:18 PM
Colombo (News 1st) ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டா கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வருகின்றார். பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோவை பார்வையிட எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று வைத்தியசாலைக்கு சென்றிருந்தார். இன்று காலை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு வாக்குமூலம் வழங்குவதற்காக வருகை தருமாறு கூறி பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோவிற்கு நேற்று (22) அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. எனினும், இன்று சமூகமளிக்க முடியாது என பாராளுமன்ற உறுப்பினர் அவரது பாதுகாப்பு உத்தியோகத்தர் மூலம் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அறிவித்திருந்தார். ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ஆற்றிய உரை குறித்து விசாரணை மேற்கொள்வதற்காகவே அவர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார்.

ஏனைய செய்திகள்